செய்தி
 Photo
பெருமதிப்பிற்குரிய சுவிஸ்வாழ் மாவீரர் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை விடுத்துள்ள அறிக்கை
[ வெள்ளிக்கிழமை, 05 ஒக்ரோபர் 2012, 06:43.09 PM GMT ]

சுவிஸ் வாழ் மாவீர பெற்றோர்களுக்கும் சகோதரர்களும் உறவினர்களுக்கும் விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளையினர் அவசரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

உயிரிலும் உயர்வான தமிழீழத்தாய்த் திருநாட்டின் மலர்விற்காய் செங்களமாடி கந்தகக்காற்றிலே விதையாகி வீழ்ந்து தமிழர் எம் வரலாற்றில் கருவாகி நிற்கும் உத்தமர்களின் நினைவு சுமந்து...அந்தக் கல்லறைத் தெய்வங்களுக்கு மாலைசாத்தி. மலர்தூவி சுடர்ஏற்றி விடியலுக்காய் வரம்கேட்கும் புனிதநாளாம் தேசிய மாவீரர் நாள் 'நவம்பர் 27" இவ்வாண்டும் அதற்கே உரிய தனித்துவத்துடன் அனைத்துலகெங்கும் பரந்து வாழும் தமிழீழதேச மக்களாலும். தமிழின உணர்வாளர்களாலும் நினைவுகூரப்படவுள்ளது.

அந்தவகையில். தமிழீழ விடுதலைப்புலிகள் - சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் வழமை போல் Forum Fribourg மண்டபத்தில் 27.11.2012 செவ்வாய்க்கிழமை மதியம் 12:30 மணிக்கு நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் 2012 நினைவெழுச்சி நாளில் தமிழர் நினைவேந்தல் அகவம் - சுவிஸ் தன் பணியை ஆற்றுவதற்காக மாவீரர் குடும்ப உறவுகளாகிய தங்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம்.

அதற்கமைவாக கடந்த காலங்களில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் திருவுருவப்படங்களை எமக்கு இதுவரை அனுப்பி வைக்காதவர்களும். தங்களால் கடந்த காலங்களில் விபரங்கள் தரப்பட்டபோதும் எமது உரிய தொடர்புகள் மேற்கொள்ளப்படாதிருப்பின் தயவு செய்து உங்களுடனான மாவீரர் குடும்ப உறவுத் தொடர்பை பேணுவதற்கு விபரங்களை 31.10.2012 இற்கு முன்னர் தந்துதவுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

Tamilar Remembrance Foundation – Swiss, Postfach 439, 4528 Zuchwil.

076 426 27 80 076 528 71 12 078 662 93 06

நன்றி

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

Tamilar Remembrance Foundation - Swiss
Postfach 439, 4528 Zuchwil

www.maveerarnaal.com

 trfswiss@gmail.com 


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 04:23.25 AM ]
வெசாக் கொண்டாட்டத்தின் போது “சோம்பிஸ்” (zombies mask) முகமூடிகளை இறக்குமதி செய்தது யார் என்று அரசாங்கம் விசாரணைகளை நடத்த வேண்டும் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
[ Saturday, 25-05-2013, 04:14.44 AM ]

பதுளை ரஜமஹா விகாரை பெரஹர நிகழ்வில் பயணித்த யானைகளில் ஒன்று குழப்பம் விளைவித்ததில் காயமடைந்த 24 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

[ Saturday, 25-05-2013, 04:11.56 AM ]

முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலாளர்களிடம் 1990ம் ஆண்டுக்கு முன்னர் உள்ள வாக்காளர் பெயர்ப் பட்டியலைத் தருமாறு படையினர் கோரி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

[ Saturday, 25-05-2013, 03:48.28 AM ]

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், எண்ணெய் விநியோகம் தொடர்பாக இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்துடன் (ஐஓசி) செய்து கொண்டுள்ள உடன்பாட்டை ரத்துச் செய்யவுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

[ Saturday, 25-05-2013, 02:39.52 AM ]
ஆசியாவிலேயே ஜனநாயக பண்புகளை முழுமையாக பின்பற்றி நிலையான அரசாங்கமொன்றை உருவாக்கியுள்ள நாடு இலங்கைதான் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
[ Saturday, 25-05-2013 02:52:27 GMT ]
ஆவி நடமாட்டம் காரணமாக ஜப்பான் பிரதமர் தனக்கென ஒதுக்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு செல்லவில்லை என பரபரப்பாக பேசப்பட்டது.
[ Saturday, 25-05-2013 03:43:16 GMT ]
அரக்கோணம் அருகே 4 மாத கைக்குழந்தையை கடத்தி ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற வழக்கில் அண்ணன், தாய்மாமா உள்ளிட்ட 3 பேரை பொலிசார் கைது செய்தனர்.
[ Saturday, 25-05-2013 03:15:09 GMT ]
சூதாட்ட வழக்கில் சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி குருநாத் மெய்யப்பனை மும்பை பொலிசார் கைது செய்தனர்.
[ Saturday, 25-05-2013 03:00:31 GMT ]
கணினியின் வருகையைத் தொடர்ந்து அறிமுகமான USB தொழில்நுட்பம் தற்போது மிக வேகமாக பிரபலமடைந்து வருகின்றது.
[ Saturday, 25-05-2013 03:36:45 GMT ]
நடிகை சனா கான் திடீரென மாயமாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.